என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவ விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்30 March 2017 7:40 AM GMT (Updated: 30 March 2017 7:40 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவ விழா நாளை(31-ந் தேதி) தொடங்கி, ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவ விழா நாளை(31-ந் தேதி) தொடங்கி, ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரம் சாமி புறப்பாடு அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடக்கிறது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வைகை வடகரையில் அமைந்துள்ள செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளுகிறார்.அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்து சிறப்பு பூஜை நடக்கிறது.
பின்னர் சுந்தரேசுவரர் சாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
இந்த உற்சவம் நடைபெறும் நாட்களில் கோவில் சார்பாகவும், உபயதாரர்கள் சார்பாகவும் அம்மன், சாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வைகை வடகரையில் அமைந்துள்ள செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளுகிறார்.அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்து சிறப்பு பூஜை நடக்கிறது.
பின்னர் சுந்தரேசுவரர் சாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
இந்த உற்சவம் நடைபெறும் நாட்களில் கோவில் சார்பாகவும், உபயதாரர்கள் சார்பாகவும் அம்மன், சாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X