என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் 5-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்30 March 2017 3:41 AM GMT (Updated: 30 March 2017 3:41 AM GMT)
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் வருகிற 5-ந்தேதி(புதன் கிழமை) முதல் தொடங்குகிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் வருகிற 5-ந்தேதி(புதன் கிழமை) முதல் தொடங்குகிறது. தொடர்ந்து 15-ந்தேதி வரையில் நடைபெறும் உற்சவத்தில் தினசரி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 8 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெற உள்ளது.
11-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், 15-ந்தேதி ராமர் பட்டாபிஷேக உற்சவமும் நடைபெற உள்ளது. உற்சவம் நடைபெறும் 11 நாட்களும் உற்சவர் ராமர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
ராமநவமி உற்சவத்தையொட்டி ராமாயண சொற்பொழிவும் கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 5-ந்தேதி ராமர் ஜனனம் என்கிற தலைப்பிலும், 6-ந்தேதி சீதா கல்யாணம், 7-ந்தேதி கைகேயி வரம், 8-ந்தேதி பாதுகா பட்டாபிஷேகம், 9-ந்தேதி சூர்ப்பனகை சூழ்ச்சி, 10-ந்தேதி ஜடாயு மோட்சம், 11-ந்தேதி சுக்ரீவ சரணாகதி, 12-ந்தேதி வாலி வதம், 13-ந்தேதி சுந்தரகாண்டம், 14-ந்தேதி அங்கதன் தூது, 15-ந்தேதி ராமர் பட்டாபிஷேகம் என்கிற பொருளில் தினசரி மாலையில் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
11-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், 15-ந்தேதி ராமர் பட்டாபிஷேக உற்சவமும் நடைபெற உள்ளது. உற்சவம் நடைபெறும் 11 நாட்களும் உற்சவர் ராமர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
ராமநவமி உற்சவத்தையொட்டி ராமாயண சொற்பொழிவும் கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 5-ந்தேதி ராமர் ஜனனம் என்கிற தலைப்பிலும், 6-ந்தேதி சீதா கல்யாணம், 7-ந்தேதி கைகேயி வரம், 8-ந்தேதி பாதுகா பட்டாபிஷேகம், 9-ந்தேதி சூர்ப்பனகை சூழ்ச்சி, 10-ந்தேதி ஜடாயு மோட்சம், 11-ந்தேதி சுக்ரீவ சரணாகதி, 12-ந்தேதி வாலி வதம், 13-ந்தேதி சுந்தரகாண்டம், 14-ந்தேதி அங்கதன் தூது, 15-ந்தேதி ராமர் பட்டாபிஷேகம் என்கிற பொருளில் தினசரி மாலையில் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X