என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
Byமாலை மலர்29 March 2017 8:31 AM GMT (Updated: 29 March 2017 8:31 AM GMT)
சேலத்தில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, பக்தர்கள் அம்மனுக்கு கூடைகளில் பூக்களை கொண்டு வந்து கொட்டினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. திருவிழாவில் தொடர்ந்து வருகிற 4-ந் தேதி இரவு 7 மணிக்கு சுப்ரமணிய சாமி ஆலயத்தில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோவிலுக்கு கொண்டு வருதல், 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
5-ந் தேதி காலை 6 மணிக்கு சக்தி பூங்கரகத்துடன் அம்மன் ஊர்வலம், 6.30 மணிக்கு அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு பொங்கல் வைபவமும், 6-ந் தேதி மாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு பால்குட ஊர்வலம், 7 மணிக்கு அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், 8-ந் தேதி இரவு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதையடுத்து, பக்தர்கள் அம்மனுக்கு கூடைகளில் பூக்களை கொண்டு வந்து கொட்டினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. திருவிழாவில் தொடர்ந்து வருகிற 4-ந் தேதி இரவு 7 மணிக்கு சுப்ரமணிய சாமி ஆலயத்தில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோவிலுக்கு கொண்டு வருதல், 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
5-ந் தேதி காலை 6 மணிக்கு சக்தி பூங்கரகத்துடன் அம்மன் ஊர்வலம், 6.30 மணிக்கு அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு பொங்கல் வைபவமும், 6-ந் தேதி மாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு பால்குட ஊர்வலம், 7 மணிக்கு அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், 8-ந் தேதி இரவு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X