search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதிக்கு 2 டன் பூக்கள் அனுப்பி வைப்பு
    X

    தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதிக்கு 2 டன் பூக்கள் அனுப்பி வைப்பு

    தெலுங்கு வருட பிறப்பையொட்டி சுமார் 2 டன் எடையுள்ள பூக்கள் தொடுக்கப்பட்டு, திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு நேற்று மாலை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு, சேலம் ஸ்ரீபக்திசாரர் பக்தசபா சார்பில் யுகாதி(தெலுங்கு வருடபிறப்பு), மகாசிவராத்திரி, பிரமோற்சவ விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களுக்கு மணமுள்ள மலர்களை தொடுத்து அனுப்பி வைப்பது வழக்கம்.

    நாளை(புதன்கிழமை) தெலுங்கு வருடபிறப்பு என்னும் யுகாதி உற்சவம் திருப்பதி-திருமலையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சேலம் ஸ்ரீபக்திசாரர் பக்தசபா சார்பில் டி.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் பூக்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பூக்களை திரளான பெண்கள் மாலையாக தொடுத்தனர். சுமார் 2 டன் எடையுள்ள பூக்கள் தொடுக்கப்பட்டு, திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு நேற்று மாலை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    Next Story
    ×