என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா
Byமாலை மலர்27 March 2017 5:25 AM GMT (Updated: 27 March 2017 5:25 AM GMT)
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து, பூக்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
திருச்சி அருகே சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையொட்டி இக்கோவிலில் உள்ள மாரியம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி நாடு தழைக்கவும், உலக நன்மைக்காகவும் கடந்த மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார்.
இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த 2-வது வார பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையொட்டி சமயபுரம் அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 57-வது ஆண்டாக அதன் தலைவர் கலியபெருமாள், செயலாளர் கோவி.கண்ணன், பொருளாளர் தினேஷ் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் படத்தை வைத்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலத்தில் யானை மீதும் பூத்தட்டை எடுத்து வந்தனர். இதில் ஏராளமான பெண்களும், வியாபாரிகளும் பூத்தட்டுக்களை சுமந்து வந்து சன்னதியை அடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
திருச்சி பொன்னகர் காமராஜபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.
இதேபோல் ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பிலும், சமயபுரம் போலீஸ் நிலையம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் சமயபுரத்திற்கு பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம், துறையூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த 2-வது வார பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையொட்டி சமயபுரம் அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 57-வது ஆண்டாக அதன் தலைவர் கலியபெருமாள், செயலாளர் கோவி.கண்ணன், பொருளாளர் தினேஷ் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் படத்தை வைத்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலத்தில் யானை மீதும் பூத்தட்டை எடுத்து வந்தனர். இதில் ஏராளமான பெண்களும், வியாபாரிகளும் பூத்தட்டுக்களை சுமந்து வந்து சன்னதியை அடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
திருச்சி பொன்னகர் காமராஜபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.
இதேபோல் ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பிலும், சமயபுரம் போலீஸ் நிலையம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் சமயபுரத்திற்கு பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம், துறையூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X