search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ருத்ரயாகம்
    X

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ருத்ரயாகம்

    திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ருத்ரயாகம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் பங்கேற்றார்.
    திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வறட்சி நீங்கி மழைபெய்ய வேண்டி ருத்ரயாகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கடம் புறப்பட்டு சாமிகளுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனத்தின் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவர் இதற்கு முன்பு திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளை விசாரணையாக இருந்து வந்தார். தருமபுரம் ஆதீனத்தின் இளைய சன்னிதானமான பிறகு, முதல் முறையாக திருவையாறு வந்தார். அங்கு அவருக்கு பொதுமக்கள் சார்பாகவும், கோவில் நிர்வாகம் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தனர்.
    Next Story
    ×