search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவையொட்டி பெருமாள் அனுமார் வாகனத்தில் எழுந்தருளிய போது எடுத்தபடம்.
    X
    விழாவையொட்டி பெருமாள் அனுமார் வாகனத்தில் எழுந்தருளிய போது எடுத்தபடம்.

    சீத்தாகேம்ப் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா

    சீத்தாகேம்ப் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாட்களில் சாமி பிரதிஷ்டை, சுதர்சன பகவான் வீதியுலா வருதல், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன.
    மும்பை சீத்தாகேம்பில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. இதையொட்டி விழா நாட்களில் சாமி பிரதிஷ்டை, சுதர்சன பகவான் வீதியுலா வருதல், கொடியேற்றம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன. 19-ந் தேதி கோவிலில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    20-ந்தேதி சாமி சேஷ வாகனத்திலும், 21-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் பெருமாள் அனுமார் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு நடந்த கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
    Next Story
    ×