search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் கோவிலில் கோபுரங்களின் திருப்பணி தொடங்கியது
    X

    திருவானைக்காவல் கோவிலில் கோபுரங்களின் திருப்பணி தொடங்கியது

    திருவானைக்காவல் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோபுரங்களில் திருப்பணிகள் தொடங்கும் பணி நடந்தது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பஞ்சப்பூதங்களில் நீர்ஸ்தலமாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    11 கோபுரங்கள், 25 விமானங்களுக்கு திருப்பணிகள் தொடங்கும் முன் கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறு,சிறுப்பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் கோபுரங்களில் திருப்பணிகள் தொடங்கும் பணி நடந்தது. இதனையொட்டி பஞ்சமுகேஸ்வரர் சன்னதியில் முகூர்த்தக்கால்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அந்த முகூர்த்தக்கால்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலின் மேற்கு வாசல் பிரதான ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் அருகில் நேற்று நடப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கோவில் உதவிஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர்கள் ரெங்கநாதன், சாத்தப்பன், ராமசாமி, கதிரேசன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×