என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு
Byமாலை மலர்23 March 2017 5:20 AM GMT (Updated: 23 March 2017 5:20 AM GMT)
நேற்று இரவு பூட்டப்பட்டு இருந்த மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
கடந்த 21-ந்தேதி இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநீர்களை கொண்டு இளநீர்காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.
அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு முழ வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு பூட்டப்பட்டு இருந்த மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், ஊர் முக்கியபிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த 21-ந்தேதி இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநீர்களை கொண்டு இளநீர்காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.
அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு முழ வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு பூட்டப்பட்டு இருந்த மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், ஊர் முக்கியபிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X