search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு
    X

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு

    நேற்று இரவு பூட்டப்பட்டு இருந்த மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    கடந்த 21-ந்தேதி இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநீர்களை கொண்டு இளநீர்காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.

    அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு முழ வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு பூட்டப்பட்டு இருந்த மதுரை காளியம்மன் கோவில் முன்பு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், ஊர் முக்கியபிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×