search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் 28-ந்தேதி பங்குனி தேரோட்டம்: இன்று கொடியேற்றப்படுகிறது
    X

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் 28-ந்தேதி பங்குனி தேரோட்டம்: இன்று கொடியேற்றப்படுகிறது

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் வருகிற 28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி இன்று கொடியேற்றப்படுகிறது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் மண்டல பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏப்ரல் 13-ந் தேதி வரை 42 நாட்கள் நடைபெறும். பங்குனி தேர்த்திருவிழா 3 மற்றும் 4-ம் பிரகாரங்களில் 8 திசைகளிலும் உள்ள கொடிமரங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதனை தொடர்ந்து சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடியேற்றத்தை கண்டருளுகிறார்.

    நாளை(வெள்ளிக்கிழமை) 2-ம் திருநாள் இரவு சுவாமி, சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் திருநாள் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் திருநாள் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும், 5-ம்திருநாள் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். வருகிற 27-ந் தேதி தெரு வடைச்சான் நிகழ்ச்சி நடைபெறும்.

    28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறு கிறது. அன்று சுவாமி, அம்பாள் தனித்தனியே பெரிய தேரில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

    பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது. தொடர்ந்து மவுனோத்ஸவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறு கிறது.

    இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பர். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மண்டல உதவி ஆணையர் முல்லை, கோவில் உதவி ஆணையர் ஜெயபிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×