என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் 28-ந்தேதி பங்குனி தேரோட்டம்: இன்று கொடியேற்றப்படுகிறது
Byமாலை மலர்23 March 2017 3:28 AM GMT (Updated: 23 March 2017 3:28 AM GMT)
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் வருகிற 28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி இன்று கொடியேற்றப்படுகிறது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேசுவரி கோவிலில் மண்டல பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏப்ரல் 13-ந் தேதி வரை 42 நாட்கள் நடைபெறும். பங்குனி தேர்த்திருவிழா 3 மற்றும் 4-ம் பிரகாரங்களில் 8 திசைகளிலும் உள்ள கொடிமரங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை தொடர்ந்து சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடியேற்றத்தை கண்டருளுகிறார்.
நாளை(வெள்ளிக்கிழமை) 2-ம் திருநாள் இரவு சுவாமி, சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் திருநாள் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் திருநாள் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும், 5-ம்திருநாள் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். வருகிற 27-ந் தேதி தெரு வடைச்சான் நிகழ்ச்சி நடைபெறும்.
28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறு கிறது. அன்று சுவாமி, அம்பாள் தனித்தனியே பெரிய தேரில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது. தொடர்ந்து மவுனோத்ஸவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறு கிறது.
இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பர். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மண்டல உதவி ஆணையர் முல்லை, கோவில் உதவி ஆணையர் ஜெயபிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடியேற்றத்தை கண்டருளுகிறார்.
நாளை(வெள்ளிக்கிழமை) 2-ம் திருநாள் இரவு சுவாமி, சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் திருநாள் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் திருநாள் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும், 5-ம்திருநாள் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். வருகிற 27-ந் தேதி தெரு வடைச்சான் நிகழ்ச்சி நடைபெறும்.
28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறு கிறது. அன்று சுவாமி, அம்பாள் தனித்தனியே பெரிய தேரில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது. தொடர்ந்து மவுனோத்ஸவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறு கிறது.
இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பர். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மண்டல உதவி ஆணையர் முல்லை, கோவில் உதவி ஆணையர் ஜெயபிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X