என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அனைத்தும் சிவனுக்கு ஐந்து
Byமாலை மலர்18 March 2017 9:31 AM GMT (Updated: 18 March 2017 9:31 AM GMT)
சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்பார்கள். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! - என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார்.
சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்பார்கள். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! - என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார்.
நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம், கிழக்கு முகமான தத்புருஷம் - பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம் - கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம் - சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம் - வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
அவர் நடனம் ஆடுவது ஐந்து சபைகளில்: சிதம்பரம்: தங்க சபை, மதுரை - வெற்றி அம்பலம் திருஆலங்காடு - ரத்தின சபை, திருநெல்வேலி - தாமிர சபை. குற்றாலம் - சித்திர சபை.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவபிரானுக்கு ஐந்தொழில்கள்.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் பஞ்சபுராணம் எனும் சிறப்புடன் சிவ சந்நிதிகளில் ஓதப்படுகிறது.
சிவனை அர்ச்சிக்க விசேஷமாக பஞ்ச வில்வம் என வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்து பத்திரங்கள் சிறப்பு பெறுகின்றன.
‘ஐந்தெழுத்து - நமசிவய’ நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ் ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ்.
சிவராத்திரி பொழுதில்... விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல் ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம், கிழக்கு முகமான தத்புருஷம் - பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம் - கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம் - சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம் - வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
அவர் நடனம் ஆடுவது ஐந்து சபைகளில்: சிதம்பரம்: தங்க சபை, மதுரை - வெற்றி அம்பலம் திருஆலங்காடு - ரத்தின சபை, திருநெல்வேலி - தாமிர சபை. குற்றாலம் - சித்திர சபை.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவபிரானுக்கு ஐந்தொழில்கள்.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் பஞ்சபுராணம் எனும் சிறப்புடன் சிவ சந்நிதிகளில் ஓதப்படுகிறது.
சிவனை அர்ச்சிக்க விசேஷமாக பஞ்ச வில்வம் என வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்து பத்திரங்கள் சிறப்பு பெறுகின்றன.
‘ஐந்தெழுத்து - நமசிவய’ நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ் ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ்.
சிவராத்திரி பொழுதில்... விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல் ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X