என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவிலில் லட்சதீப திருவிழா
Byமாலை மலர்18 March 2017 5:05 AM GMT (Updated: 18 March 2017 5:05 AM GMT)
காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான லட்சதீப விழா நேற்று நடந்தது.
காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான லட்சதீப விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவில் உட்புறத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு வாரியார் சுவாமிகள் ஞானதிருவளாகத்தில் மாலை 6 மணிக்கு வாரியார் சுவாமிகளின் கொள்ளுபேத்திகள் வள்ளி, லோச்சனா ஆகியோரின் திருப்புகள் விரிவுரை நிகழ்ச்சியும், வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் வாதவூரனின் செஞ்சொல் உரை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் பி.ராஜகோபால் தலைமையில், கதைசொல்லும் பரதநாட்டிய பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் வாரியார் தம்பி மகன் புகழனார், கோவில் செயல் அலுவலர் மாதவன், ஞானதிருவளாக தலைமை நிர்வாகி திருவடி, வேலூர் மாநகராட்சி சுகாதாரகுழு முன்னாள் தலைவர் கே.பி.ரமேஷ், கவிஞர் லக்குமிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவை முன்னிட்டு வாரியார் சுவாமிகள் ஞானதிருவளாகத்தில் மாலை 6 மணிக்கு வாரியார் சுவாமிகளின் கொள்ளுபேத்திகள் வள்ளி, லோச்சனா ஆகியோரின் திருப்புகள் விரிவுரை நிகழ்ச்சியும், வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் வாதவூரனின் செஞ்சொல் உரை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் பி.ராஜகோபால் தலைமையில், கதைசொல்லும் பரதநாட்டிய பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் வாரியார் தம்பி மகன் புகழனார், கோவில் செயல் அலுவலர் மாதவன், ஞானதிருவளாக தலைமை நிர்வாகி திருவடி, வேலூர் மாநகராட்சி சுகாதாரகுழு முன்னாள் தலைவர் கே.பி.ரமேஷ், கவிஞர் லக்குமிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X