search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நொய்யல், சேமங்கியில் மதுரை வீரன்சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
    X

    நொய்யல், சேமங்கியில் மதுரை வீரன்சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மதுரை வீரன் நகரில் உள்ள ஸ்ரீவெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத ஸ்ரீமதுரைவீரன் சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மதுரை வீரன் நகரில் உள்ள ஸ்ரீவெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத ஸ்ரீமதுரை வீரன் சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அபிஷேகத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

    இதில் எராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீமதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.
    Next Story
    ×