என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்
Byமாலை மலர்4 Feb 2017 5:38 AM GMT (Updated: 4 Feb 2017 5:38 AM GMT)
செய்யாறு டவுன் திருவோத்தூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
செய்யாறு டவுன் திருவோத்தூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத்துடன் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 7-வது நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கரிக் கப்பட்டிருந்தது.
செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விநாயகர், வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் சன்னதி தெரு, ஆற்றங்கரைத்தெரு, குமரன்தெரு முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று (சனிக்கிழமை) குதிரை வாகனத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நந்தி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 6-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலையில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
இரவு கொடி இறக்குதலுடன் ராவணேஸ்வரர் திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
இற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை உதவி ஆணையாளர் மோகனசுந்தரம், செய்யாறு ஆய்வாளர் ராஜா, செயல் அலுவலர் உமேஷ்குமார் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விநாயகர், வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் சன்னதி தெரு, ஆற்றங்கரைத்தெரு, குமரன்தெரு முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று (சனிக்கிழமை) குதிரை வாகனத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நந்தி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 6-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலையில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
இரவு கொடி இறக்குதலுடன் ராவணேஸ்வரர் திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
இற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை உதவி ஆணையாளர் மோகனசுந்தரம், செய்யாறு ஆய்வாளர் ராஜா, செயல் அலுவலர் உமேஷ்குமார் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X