search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி குளக்கரையில் நின்றவாறு தீர்த்தவாரி கண்டருளிய போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி குளக்கரையில் நின்றவாறு தீர்த்தவாரி கண்டருளிய போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி: இன்று நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி

    வைகுண்ட ஏதாதசிவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி இன்று நடை பெறுகிறது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன்வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. விழாவையொட்டி ராப்பத்து உற்சவத்தின் 10-ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார்.

    அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப் பெருமாளை சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திர புஷ்கரணியில் சயனப்பெருமாள் நீராடுவதை கண்டருளினார். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளித்தனர். தீர்த்தவாரிக்கு பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    பின்னர் நம்பெருமாள், சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 12.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு மதியம் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார்.

    இரவு 11 மணிமுதல் இன்று(புதன்கிழமை)அதிகாலை 3 மணிவரை அரையர் சேவைவுயுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது. தொடர்ந்து 4 மணி முதல் 6 மணிவரை பொதுஜன சேவையும், 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 8 மணிமுதல் 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை(வியாழக்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    அதன் பின் அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை சாற்றுமறை நடை பெறுகிறது.
    Next Story
    ×