search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலையின் தனித்தன்மை
    X

    சபரிமலையின் தனித்தன்மை

    சாதாரணமாக உள்ள மற்ற ஸ்தலங்களை விட அதிகமான சிறப்புகள் பொறுத்தங்கள் சபரிமலைக்கு உண்டு. இவை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    சாதாரணமாக உள்ள மற்ற ஸ்தலங்களை விட அதிகமான சிறப்புகள் பொறுத்தங்கள் சபரிமலைக்கு உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் ஏதாவது ஏழு பொறுத்தங்களில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

    1. சுயம்பு லிங்க பூமி-சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை

    2. யாக பூமி - மகா யாகம் நடந்த ஸ்தலம்

    3. பலி பூமி-பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்

    4. யோக பூமி-ரிஷியின் தவமிருந்த ஸ்தலம்

    5. தபோ பூமி-யோகிமார் வாழ்ந்த ஸ்தலம்

    6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி

    7. சங்கமம் பூமி - நதி சங்கமிக்கும் ஸ்தலம்

    இந்த எழில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும். இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒரு ஜீவாத்மாவினுடைய அனைத்துப் பாவங்கள் நீங்கி கோடிப்புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்த்திரங்கள் சொல்கின்றன. சபரிமலை மேற்கண்ட ஏழு அம்சங்களையும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும் ஐயப்பனைத் தரிசிப்பவர்களுக்கும் கோடிப் புண்ணியம் கிடைக்கிறது. அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடையத் தகுதி பெறுகிறார்கள்.
    Next Story
    ×