என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: 5-ந்தேதி சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
Byமாலை மலர்3 Dec 2016 4:39 AM GMT (Updated: 3 Dec 2016 4:39 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா 5-ந்தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 14-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.
அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இதனை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா வருகிற 5-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின்னர் முகூர்த்த பந்தல் காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் நட உள்ளனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கு சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இதனை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா வருகிற 5-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின்னர் முகூர்த்த பந்தல் காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் நட உள்ளனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கு சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X