search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: 5-ந்தேதி சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: 5-ந்தேதி சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா 5-ந்தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 14-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.

    அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இதனை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா வருகிற 5-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின்னர் முகூர்த்த பந்தல் காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் நட உள்ளனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கு சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    Next Story
    ×