search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாராவியில் அய்யா வைகுண்டர் திருஏடு வாசிப்பு திருவிழா
    X

    தாராவியில் அய்யா வைகுண்டர் திருஏடு வாசிப்பு திருவிழா

    மும்பை தாராவியில் நாளை முதல் வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு, பாராயண உரை திருவிழா நடக்கிறது.
    மும்பை தாராவியில் உள்ள கம்பா தேவ் கோவில் மைதானத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு, பாராயண உரை திருவிழா நடக்கிறது.

    இதில், மார்த்தாண்டத்தை சேர்ந்த கார்த்திகேயன், இளையநயினார் குளத்தை சேர்ந்த டேவிட் ஆகியோர் திரு ஏடு வாசிக்கிறார்கள். திக்கணங்கோடை சேர்ந்த அசோக்குமார் அகிலத்திரட்டு பேருரை மற்றும் பாராயண உரை நிகழ்த்துகிறார். விழாவையொட்டி வருகிற 9-ந் தேதி அய்யாவின் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 11-ந்தேதி அய்யாவின் பட்டாபிசேக விழாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தாராவி அன்னை சிவகாமி சால் அய்யா வைகுண்டர் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×