என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
Byமாலை மலர்30 Nov 2016 5:00 AM GMT (Updated: 30 Nov 2016 5:00 AM GMT)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 2-ந் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், அய்யா வைகுண்டசாமி அகிலத்திரட்டு மற்றும் அருள் நூல் வாயிலாக தன்னுடைய பக்தர்களுக்கு சொன்ன கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை திருநடை திறக்கப்பட்டு பணிவிடை நடைபெறுகிறது. தொடர்ந்து வாகன பவனியும், பகலில் பணிவிடையும், உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு அன்னதானம் நடக்கிறது.
டிசம்பர் 16-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு இனிப்புகள், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவை வழங்கப்படுகிறது. 18-ந் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
திருஏடுவாசிப்பு திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், மாலையில் திருஏடு வாசிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளில் குமரி, நெல்லை, தேனி மற்றும் தூத்துக்குடியிலுள்ள அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை திருநடை திறக்கப்பட்டு பணிவிடை நடைபெறுகிறது. தொடர்ந்து வாகன பவனியும், பகலில் பணிவிடையும், உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு அன்னதானம் நடக்கிறது.
டிசம்பர் 16-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு இனிப்புகள், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவை வழங்கப்படுகிறது. 18-ந் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
திருஏடுவாசிப்பு திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், மாலையில் திருஏடு வாசிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளில் குமரி, நெல்லை, தேனி மற்றும் தூத்துக்குடியிலுள்ள அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X