search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரம்பலூர் அருகே வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    பெரம்பலூர் அருகே வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரம் எதிர்புறம் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் நவக்கிரக ஆலயம் மகாகும்பாபிஷேகம் விழா நடந்தது.
    பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரம் எதிர்புறம் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் நவக்கிரக ஆலயம் மகாகும்பாபிஷேகம் விழா நடந்தது.

    ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் சித்தர் சுவாமி மலையடி வாரத்தில் அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவக்கிரஹ கோயில் கும்பா பிஷேக விழாவை யொட்டி காலை 4 மணிக்கு பூஜைகள் துவங்கி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து தலையாட்டி சித்தர் ஆசிரம நிர்வாகிகள் காமராஜ், நந்தீஸ்வரன், சக்தி ஆகியோர் முன்னிலையில் காலை 9 மணியளவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் எளம்பலூர் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை கோயில் நிர்வாகி தயாளன் சுவாமிகள் தலை மையிலான குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×