search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன?
    X

    ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன?

    சபரிமலையில் தவக்கோலத்தில் காட்சிதரும் ஐயப்பனின் இருகால்களும் துண்டு கட்டப்பட்டிருப்பதற்கான ரகசியத்தை கீழே பார்க்கலாம்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றும் நாம் ஐயப்பனை தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

    ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
    Next Story
    ×