என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்8 Nov 2016 9:07 AM GMT (Updated: 8 Nov 2016 9:07 AM GMT)
வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள வட்டன்விளை தெற்கு தெரு முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை 7 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. நண்பகல் 1 மணிக்கு ஏராளமான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும்,சமத்துவம் சகோதரத்துவம் வளர வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு வில்லிசை, தொடர்ந்து இளைய பெருமாள் குழுவினரின் மெல்லிசை கச்சேரியும் நடந்தது.
இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு மேள வாத்தியங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன் 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது. நண்பகல் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நடந்தது. இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை நடக்கிறது.தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நடு இரவு 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், வில்லிசை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, நடு இரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் திரைப்பட இன்னிசை கச்சேரி, கரகாட்டம் ஆகியன நடைபெறுகிறது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும்,சமத்துவம் சகோதரத்துவம் வளர வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு வில்லிசை, தொடர்ந்து இளைய பெருமாள் குழுவினரின் மெல்லிசை கச்சேரியும் நடந்தது.
இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு மேள வாத்தியங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன் 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது. நண்பகல் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நடந்தது. இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை நடக்கிறது.தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நடு இரவு 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், வில்லிசை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, நடு இரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் திரைப்பட இன்னிசை கச்சேரி, கரகாட்டம் ஆகியன நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X