என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குபேரனுக்கு செல்வம் அருளிய சிவபெருமான்
Byமாலை மலர்25 Oct 2016 6:41 AM GMT (Updated: 25 Oct 2016 6:41 AM GMT)
குபேரனுக்கு சிவபெருமான் சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளை வழங்கி அருளினார்.
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தஞ்சபுரீஸ்வரர் கோவில். ஒரு முறை ராவணன், குபேரனிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு விரட்டி அடித்தான். இதையடுத்து வடதிசை நோக்கிச் சென்ற குபேரன், சசிவனம் என்னும் வன்னிக் காட்டுப் பகுதிக்கு வந்தான்.
தேவர்களாலும், முனிவர்களாலும் ‘விருபாசுர சதுர்வேதி மங்கலம்’ என்று போற்றப்படும் இந்த இடத்தில் அமலேஸ்வரர் என்ற பெயருடன் சுயம்புவாக இருந்தார் சிவபெருமான். அந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கிய குபேரன், அங்கிருந்து இறைவனுக்கு தொண்டு செய்து வந்தான்.
அவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் மேற்கு நோக்கியபடி குபேரனுக்கு காட்சி அளித்தார். மேலும் அவனுக்கு சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளை வழங்கி அருளினார். இதனால் இந்த திருத்தலம் சித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஈசனிடம் இருந்து பல வரங்களை பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கி ஆட்சி செய்யத் தொடங்கினான். மேலும் தான் செல்வம் பெற்ற இந்த தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு அருளும்படி சிவபெருமானை வேண்டினான்.
தேவர்களாலும், முனிவர்களாலும் ‘விருபாசுர சதுர்வேதி மங்கலம்’ என்று போற்றப்படும் இந்த இடத்தில் அமலேஸ்வரர் என்ற பெயருடன் சுயம்புவாக இருந்தார் சிவபெருமான். அந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கிய குபேரன், அங்கிருந்து இறைவனுக்கு தொண்டு செய்து வந்தான்.
அவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் மேற்கு நோக்கியபடி குபேரனுக்கு காட்சி அளித்தார். மேலும் அவனுக்கு சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளை வழங்கி அருளினார். இதனால் இந்த திருத்தலம் சித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஈசனிடம் இருந்து பல வரங்களை பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கி ஆட்சி செய்யத் தொடங்கினான். மேலும் தான் செல்வம் பெற்ற இந்த தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு அருளும்படி சிவபெருமானை வேண்டினான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X