என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாம்பாட்டி சித்தர் குகை
Byமாலை மலர்28 Sep 2016 8:59 AM GMT (Updated: 28 Sep 2016 8:59 AM GMT)
மருதமலை முருகன் கோவிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் குகையில் ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி தியானம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.
மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பாம்பாட்டி சித்தரை வணங்கி தியானம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.
கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது. அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
பாம்பாட்டி சித்தருக்கும் கோவிலுக்கும் ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உள்ளது. அதன் வழியாக தான் சித்தர் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை தினமும், காலை, மாலை நேரத்தில் தரிசித்து வருவதாக நம்பப்படுகிறது.
முருகன் அருள்பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார். இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதாக சொல்லப்படுகிறது.
தற்போது பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளித்து வருகிறார்கள். பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும். இந்த சித்தரை வழிபட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையான பெறுவர். இங்கு தியானம் செய்வது மனஅமைதியை தரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X