search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஞான சக்தியாக வலம் வரும் சரஸ்வதி தேவி
    X

    ஞான சக்தியாக வலம் வரும் சரஸ்வதி தேவி

    ஞான சக்தியாக வலம் வரும் சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது.
    வைரத்தின் அழகு, அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வமான இவர், பிரம்ம பிரியை. ஞான சக்தியாக வலம் வரும் சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடு செய்வது முறையாகும். 

    இது சரஸ்வதி தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜயதசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பல குழந்தைகள் கல்வியை இன்றைய தினத்தில்தான் தொடங்குவார்கள். இந்த நாளில் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.

    வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். 
    Next Story
    ×