search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி விழா: பழனி கோவிலில் 11 நாட்கள் தங்க ரத புறப்பாடு நிறுத்தம்
    X

    நவராத்திரி விழா: பழனி கோவிலில் 11 நாட்கள் தங்க ரத புறப்பாடு நிறுத்தம்

    நவராத்திரி விழாவையொட்டி பழனி கோவிலில் 11 நாட்கள் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது.
    தமிழ்கடவுள் முருகபெருமானின் 3-ம் படை வீடு பழனி திருத்தலமாகும். இங்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு விழாக்கள் நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலில் தினசரி தங்கரத புறப்பாடு நடந்து வருகிறது. இந்த கோவிலில் உள்ள தங்க ரதம் தமிழகத்தின் முதல் தங்க ரதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கோவிலுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட வருவாய் கிடைக்கிறது.

    தற்போது மலைக்கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா அக்டோபர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த விழாவின் போது சுவாமி கொலுவில் வீற்றிருப்பார். எனவே தங்க ரத புறப்பாடு 11 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. அக்டோபர் 12-ந் தேதி முதல் வழக்கம் போல் தங்க ரத புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×