என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நொய்யல் அருகே ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்26 Sep 2016 3:38 AM GMT (Updated: 26 Sep 2016 3:38 AM GMT)
நொய்யல் அருகே ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கோம்பு பாளையத்தில் உள்ள பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனிவாசபெருமாள் கோவிலில் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைப்பெற்றது.
குத்து விளக்கு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையை முன்னிட்டு பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து குத்து விளக்குகளை கொண்டு வந்து அருள்மிகு பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனி வாசபெருமாள் கோவிலின் முன் வரிசையாக வைத்து வாழை இலையின் மேல் பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம், வைத்து குத்து விளக்கிற்கு தீபம் ஏற்றி புரோகிதர் வேதமந்திர சூலோகங்கள் ஓதினார்.
பின்னர் பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனிவாசபெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர் பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், திருமஞ்சனம், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைப்பெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனிவாசபெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X