search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நொய்யல் அருகே ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
    X

    நொய்யல் அருகே ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

    நொய்யல் அருகே ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
    கரூர் மாவட்டம், கோம்பு பாளையத்தில் உள்ள பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனிவாசபெருமாள் கோவிலில் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைப்பெற்றது. 

    குத்து விளக்கு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையை முன்னிட்டு பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து குத்து விளக்குகளை கொண்டு வந்து அருள்மிகு பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனி வாசபெருமாள் கோவிலின் முன் வரிசையாக வைத்து வாழை இலையின் மேல் பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம், வைத்து குத்து விளக்கிற்கு தீபம் ஏற்றி புரோகிதர் வேதமந்திர சூலோகங்கள் ஓதினார். 

    பின்னர் பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனிவாசபெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர் பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், திருமஞ்சனம், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைப்பெற்றது. 

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீனிவாசபெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×