என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்26 Sep 2016 2:53 AM GMT (Updated: 26 Sep 2016 2:53 AM GMT)
கள்ளக்குறிச்சி பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 22 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலுமங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் காலை 7 மணிக்கு வேத கோஷங்கள் முழங்க பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோவில், விரியூர் வேணுகோபால்சாமி கோவில், குளத்தூர் லட்சுமி நாராயணபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தியாகதுருகம்
தியாகதுருகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு திருமஞ்சனமும், பகல் 11.50 மணிக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் சீதேவி பூதேவியுடன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X