search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருதமலை முருகனுக்கு உகந்த அபிஷேகப் பொருளும், பலன்களும்
    X

    மருதமலை முருகனுக்கு உகந்த அபிஷேகப் பொருளும், பலன்களும்

    மருதமலை முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.
    மருதமலை முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

     பொருள் பலன்
    1. நன்னீர்- தூய்ப்பிக்கும்
    2. நல்லெண்ணெய்- நலம் தரும்
    3. பச்சரிசிமா- கடன் தீரும் பாபநாசம்
    4. மஞ்சள் தூள்- நல்நட்பு வாய்ப்பிக்கும், அரசுவசியம்
    5. திருமஞ்சனத்தூள்- நோய் தீர்க்கும்
    6. பஞ்சகவ்யம்- தீதழிக்கும் ஆன்மசுத்தி
    7. பசும்பால்- நீண்ட ஆயுள் தரும்
    8. பசுந்தயிர்- மகப்பேறு வாய்க்கும்
    9. பஞ்சாமிருதம்- தீக்காயுள், வெற்றி தரும்
    10. தேன்- சுகம் சங்கீத விருத்தி
    11. நெய்- சுகவாழ்வு, மோட்சம்
    12. சர்க்கரை- எதிரியை ஜெயிக்கும்
    13. இளநீர்- நல் சந்ததியளிக்கும்
    14. கருப்பஞ்சாறு- ஆரோக்கியமளிக்கும்
    15. நார்த்தம்பழம்- சந்ததி வாய்க்கும்
    16. சாத்துக்குடி- துயர் துடைக்கும்
    17. எலுமிச்சை- யமபய நாசம், நட்புடை சுற்றம்
    18. திராட்சை- திட சரீரம் அளிக்கும்
    19. வாழைப்பழம்- பயிர் செழிக்கும்
    20. மாம்பழம்- செல்வம், வெற்றி தரும்
    21. பலாப்பழம்- மங்களம் தரும் யோக சித்தி
    22. மாதுளை- பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
    23. தேங்காய் துருவல்- அரசுரிமை
    24. திருநீறு- சகல நன்மையும் தரும்
    25. அன்னம்- விளை நிலங்கள் நன்மை தரும்
    26. சந்தனம்- சுகம், சுவர்க்க போகம் தரும்
    27. பன்னீர்- சருமம் காக்கும்
    28. கும்பஜலம்- பிறவிப்பயன் அளிக்கும்
    29. சந்தாபிஷேகம்- நலம் எல்லாம் அளிக்கும்
    30. ஸ்வர்ணம் (அ)
     ரத்னாபிஷேகம்- சகல சவுபாக்கியமும் கிட்டும்
    Next Story
    ×