search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முனிநாதபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    முனிநாதபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடு

    முனிநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுனீஸ்வரசாமி கோவில் சிறப்பு அபிஷேக விழா நடைப்பெற்றது.



    கரூர் மாவட்டம், கோம்பு பாளையம் ஊராட்சி முனிநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுனீஸ்வரசாமி கோவில் சிறப்பு அபிஷேக விழா நடைப்பெற்றது. விழாவை யட்டி இந் நிலையில் ஸ்ரீமுனீஸ்வரசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

    சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர், ஸ்ரீமுனீஸ்வரசாமி, கன்னிமார்சாமி, கருப்பண்ணசாமி, ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

    பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. 

    இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர், ஸ்ரீமுனீஸ்வரசாமி கன்னி மார்சாமி, கருப்பண்ண சாமியை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
    Next Story
    ×