என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஈரோடு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்4 April 2016 4:25 AM GMT (Updated: 4 April 2016 4:26 AM GMT)
ஈரோடு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் வந்தனர்.
ஈரோடு நேதாஜிரோடு முனிசிபல்சத்திரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி காலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடினார்கள். பின்னர் அங்கிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது சில பக்தர்கள் கடவுள் வேடமிட்டு அலகுகுத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காவிரிரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு வழியாக செல்லாண்டியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அதன்பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு குண்டம் விழாவும், பகல் 12 மணிக்கு பொங்கல் விழாவும் நடக்கிறது. வருகிற 7-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
இதையொட்டி காலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடினார்கள். பின்னர் அங்கிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது சில பக்தர்கள் கடவுள் வேடமிட்டு அலகுகுத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காவிரிரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு வழியாக செல்லாண்டியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அதன்பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு குண்டம் விழாவும், பகல் 12 மணிக்கு பொங்கல் விழாவும் நடக்கிறது. வருகிற 7-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X