search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆகமவிதி கடைப்பிடிக்கப்படும் சுசீந்திரம் கோவில்
    X

    ஆகமவிதி கடைப்பிடிக்கப்படும் சுசீந்திரம் கோவில்

    பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது. பல மன்னர்களால், பல கால கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழுமையான திருக்கோவிலாக திகழ்கின்றது. இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களையும் இங்கு காணலாம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜை களும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

    தமிழகத்து சிவாச்சாரியர் களும் (பட்டர்கள்) கர்நாட கத்தை சேர்ந்து துளு போற்றி மார்களும், கேரளத்து மலையாள நம்பூதிரிமார்களும் இந்த கோவிலில் பூசாரிகளாக உள்ள னர். கொன்றையடி திருக் கோவிலின் தந்திரியாக பட்டர் எனப்படும் நம்பூதிரிகளும், உற்சவமூர்த்திகளுக்கு பூஜை களும், உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்ய திருக் கோவி லுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகரின் ஆட்களும் இருந்து வருகின் றன.

    தெக்கிடம் பெருமாள் என அழைக்கப்படும் விஷ்ணுவின் திருவுருவமானது கடுச்சரை யோகதால் (மருந்து) உருவாக் கப்பட்டு அவர் எப்போதும் அலங்காரப் பிரியராகவும், சிவன் அபிஷேகப்பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். விஷ்ணுவாகிய பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. இங்குள்ள உற்சவ மூர்த்தி களுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்திரன் வந்து அர்த்தசாம பூஜை (இந்திரன்பூஜை) செய்வ தாக ஐதீகம் உள்ள இந்த கோவிலில் இரு பூசாரிகள் (மேல்சாந்தி) மாறி, மாறி இரண்டு சன்னதிகளிலுமாக பூஜை செய்து வருகின்றனர்.

    இரண்டு சன்னதிகளில் (பெருமாள், தாணுமாலயன்), புதிதாக பூஜைக்கு வருபவர் கள் மூலஸ்தானத்தின் முன் நின்று “அகம் கண்டதை புறம் கூற மாட்டேன்” என்ற சத்திய பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்த பின்பு தான் கருவறைகளில் (மூலம் தானம்) பூஜை செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியை நடத்தி மந்திரம் உபதேசம் செய்து கொடுக்கும் அதிகாரம் மற்றும் அனுமதி திருக்கோவி லுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகருக்கு இன்றும் இருந்து வருகிறது. இது கால காலமாய் நடை பெற்று வரு கிறது.

    விழா காலங்களில் இரவு இறைவன் வீதி உலா முடிந்து திருக்கோவிலினுள் வந்த பிறகே தீபாராதனை, பூஜைகள், ஸ்ரீபலி போன்றவை நடைபெறுகிறது. வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத ஆகம விதி பல காலமாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாணு மாலயன் சன்னதியில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வைபவம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். கேரளாவில் முதல்-மந்திரியாக இருந்த பட்டம் தாணு பிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐ.சி.எஸ்.பதவி வகித்த தாணு அய்யர் போன்றவர்களுக்கு கூட இங்கு பெயர் சூட்டுதல் வைபவம் நடந்ததாக அறிய முடிகிறது. இது தற்போதும் நடைபெற்று வருகிறது, அதனை திருக்கோவிலுடைய ஸ்தானிகரே செய்து வருகிறார்.

    மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்

    தமிழகத்தின் தென்கோடி யில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியில் பழையாற்றின் கரை அருகே இயற்கை எழில்சூழ, நெடிதுயர்த்த கோபுரக் காட்சியுடன் தாணுமாலயன் கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது.

    தாணு என்பது சிவபெருமானையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது பிரமனையும் குறிப்பிடுவது ஆகும். இந்த ஸ்தலத்திற்கு வீரகேரள சதுர்வேதிமங்கலம் ராஜராஜ வளநாட்டுத் திருச்சி வந்திபுரம், நாஞ்சி நாட்டு சிவந்திரம் என்ற பெயர்களும் பெருமை தருவதாக உள்ளது. இந்திரன் தனது சாப விமோசனம் பெற்றதும் இந்த ஸ்தலத்தில் தான்.

    அத்திரி முனிவருக்கும், அவரது துணைவி ஆனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

    விமோசனம்

    இந்திரன் தான் அடைந்த சாப விமோசனம் பெற்றதினால், அவனே அர்த்த சாம பூஜை செய்து வருவதாக ஐதீகம். இந்த கோவிலின் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டதும் 134½ அடி உயரமுள்ளதாகும். கோபுரத் தில் உள்ள 7 நிலைகளிலும் பச்சிலை மருந்துகளால் ஸ்தல புராணமும், கோவில் ஸ்தல வரலாறும் வரையப்பட்டுள்ளது. கோவிலுக்குள் ஏராளமான கலை அழகு நிறைந்த சிற்பங்கள், தூண்கள் கல் மண்டபங்கள், இசைத் தூண்கள் உள்ளன.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த செண்பகராமன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், குலசேகர மண்டபம், வசந்த மண்டபம், அலங்கார மண்டபம் 12 ராசிகளையும் பூமியைப் பார்த்து தலைகீழாக அமைந் துள்ள நவக்கிரக மண்டபம், சித்திரசபை ஆகியவைகள் கலைச்சிறப்பு மிக்கவையாகும். ஒரே கல்லில் 18 அடி உயரத்தில் சீதாராமன் சன்னதிக்கு எதிரே கம்பீரமாக விஸ்வரூப கோலத்தில் காட்சி தரும் ராமபக்த அனுமன், வேறு எங்கும் காண முடியாத கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் உள்ள நூற்றுக்கணக்கான கல் வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.

    தலைமையிடம்

    குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் முதன் மைக்கோவிலாக சுசீந்திரம் கோவில் சிறப்பு பெற்று வருகிறது. நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வரும்பொழுது தேவசம் தலைமையிடம் மட்டும் சுசீந்திரத்தில் இயங்கி வருவதிலிருந்து தாணுமாலயன் கோவிலின் பெருமையை உணர முடியும். கி.பி.1410-ம் ஆண்டில் சேர மன்னர் “ ஸ்ரீஉதயமார்த் தாண்ட வர்மா” வினால் அலங்கார மண்டபமும், இசைத் தூண்களும் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன. இந்த கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்த பின்பு முன்புபோல் ஆகம விதிப்படி பூஜைகளும் திருவிழாக்களும் நடை பெற்று வருகின்றன.

    தேரோட்ட தத்துவம்

    புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசூயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்து அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் “பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும்” என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

    அதிலும் பன்னிரண்டு படா கையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடைகள் உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.
    Next Story
    ×