search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒரிசா ஜெகந்நாதர் கோவில்  - பூரி
    X

    ஒரிசா ஜெகந்நாதர் கோவில் - பூரி

    இந்தியாவின் கிழக்குப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் அருகில் அமைத்துள்ள ஒரிசா மாநிலத்தின் பூரி நகரில் புனித யாத்திரையாக விளங்கும் ஜெந்தாதர் ஆலயம் அமைந்துள்ளது.
    இந்தியாவின் கிழக்குப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் அருகில் அமைத்துள்ள ஒரிசா மாநிலத்தின் பூரி நகரில் புனித யாத்திரையாக விளங்கும் ஜெகந்தாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்துசமய மக்களின் தலைசிறந்த புனித இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இதில் ஜெகந்நாதர் அழகு மேனியுடன் வீற்றிருக்கிறார். கடற்கரை நகரமான இங்கு திருவிழா நேரத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகளும், ஒரிசாவின் பாரம்பரிய நடனமும் நடைபெறுகிறது.இது ஒரிசா மாநிலத்தின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கிறது.

    யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களின் வழிபாட்டு யாத்திரையை இக்கோவிலில் தான் நிறைவு செய்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக சென்று வரக்கூடிய ஒரு சிறந்த வழிபாட்டுத்தலமாகும்.



    இந்தியாவின் புனிதமான தலமாக விளங்கும் இந்நகரம் ஒரிசா கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் திருவிழாவின் போது ரதயாத்திரை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்தேர் திருவிழாவின்போது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட பக்தர்களும் கலந்து கொள்கிறார்கள். ரத யாத்திரையின்போது ரதத்தில் இறைவன் பாலபத்ரா மற்றும் தேவிசுபத்ரா உன்னதமாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா அழைத்து வருகின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் ஒரு முறையேனும் இத்தலத்திற்கு சென்று வர வேண்டும். அப்படி வந்தால் தங்களது கஷ்டம், தொல்லைகள் நீங்கி இன்பமுடன் வாழும் நிலையை அடையலாம்.
    Next Story
    ×