search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் அருளும் லட்சுமி குபேர மந்திரம்
    X

    செல்வம் அருளும் லட்சுமி குபேர மந்திரம்

    செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி வெங்கடாசலபதிக்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.
    ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம்
    விநேஸ்வராய நம!''

    இந்த மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து.

    "ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
    தனதான்யாதிபதயே தனதான்ய
    ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா''

    இந்த யந்திரத்தைக் கோலமாக பூஜை அறையில் போட்டு அதன் நடுவில் ஒன்றும் எண் இட்ட இடங்களில் தலா 1 வீதமும் கமலதீபம் ஏற்றி இம்மந்திரத்தை 32 வீதம் தினம் ஜெபித்து வர பணக்கஷ்டமே வராது.

    விஷ்ணு சகஸ்ரநாமத்தில் குபேர நிதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46-வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (பழைய மூலவர் கருப்பு படத்திற்கு)க்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.

    "விஸ்தாரஸ் ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்
    பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ
    மகாகோசோ மகாபோகோ மகாதந:''
    Next Story
    ×