search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரிக்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி பாடல்
    X

    நவராத்திரிக்கு சொல்ல வேண்டிய சரஸ்வதி பாடல்

    சரஸ்வதி கல்வியின் தெய்வம். சரஸ்வதிக்கு தேவிக்கு உகந்த இந்த பாடலை நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மாலையில் பாடி பூஜை செய்து வரலாம்.
    கலைவாணி நின் கருணை தேன்மழையே
    விளையாடும் என் நாவில் செந்தமிழே
    அலங்கார தேவதையே வனிதாமணி
    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
    வானகம் வையகம் உன் புகழ் பாடும்.
    Next Story
    ×