search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறெழுத்து மந்திரம்
    X

    அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறெழுத்து மந்திரம்

    முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஓம் சுமுகாய நம
    ஓம் ஏகதந்தாய நம
    ஓம் கபிலாய நம
    ஓம் கஜகர்ணகாய நம
    ஓம் லம்போதராய நம
    ஓம் விநாயகாய நம
    ஓம் விக்னராஜாய நம
    ஓம் கணாத்பதியே நம
    ஓம் தூமகேதுவே நம
    ஓம் கணாத்ய க்ஷசாய நம
    ஓம் பாலசந்திராய நம
    ஓம் கஜானனாய நம
    ஓம் வக்ரதுண்டாய நம
    ஓம் சூர்ப்ப கன்னாய நம
    ஓம் ஏரம்பாய நம
    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

    முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஷூம் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார்.

    வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
    Next Story
    ×