search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம்
    X

    சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்துதியை சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
    ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
    ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
    தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
    ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

    - சந்திர பகவான் துதி

    பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

    (இத்துதியை திங்கட்கிழமைகளிலும், சந்த்ராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; சந்திர தோஷங்கள் தீரும்.)
    Next Story
    ×