search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றி தரும் வேலன் துதி
    X

    வெற்றி தரும் வேலன் துதி

    வாழ்க்கையில் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்க வெற்றி தரும் வேலன் துதியை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    ஆறுமுகம் படைத்த ஐயனே சரணம்
    ஆதிசிவன் குமரா அப்பனே சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்
     
    அடியார்க்கு அருள்வாய் அப்பனே சரணம்
    ஆடும் மயில் ஏறும் ஆண்டவா சரணம்
     ஐங்கரனுக்கு இளையா ஆறுமுகா சரணம்
    முருகனே மால்மருகனே சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்
     
    வள்ளிமணவாளனே வடிவேலா சரணம்
    புள்ளிமயில் மேலே வருவோனே சரணம்
    குஞ்சரி மனமகிழ் குமரேசா சரணம்
    கோபாலன் மருகனே குருபரா சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்
     
    பண்டார வேடம் கொண்ட பழனியப்பா சரணம்
    பழமுதிர்ச் சோலையில் வாழ்பவனே சரணம்
    கழுகுமலை வாழும் கந்தா சரணம்
    காத்திடுவாய் எங்களை கதிர்வேலா சரணம்
     சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்.
    Next Story
    ×