என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் (19.12.2017 முதல் 25.12.2017 வரை)
Byமாலை மலர்19 Dec 2017 5:34 AM GMT (Updated: 19 Dec 2017 5:34 AM GMT)
19.12.2017 முதல் 25.12.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
19-ந்தேதி (செவ்வாய்) :
* சகல விஷ்ணு ஆலயங் களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வேதபிரான் பட்டர் மாளிகையில் பச்சை பரப்பி கடாசித்து கோபால விலாசம் எழுந்தருளல்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
20-ந் தேதி (புதன்) :
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (வியாழன்) :
* பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய் பல்லக்கில் எழுந்தருளல்.
* மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து சேவை.
* மேல்நோக்கு நாள்.
22-ந் தேதி (வெள்ளி) :
* சதுர்த்தி விரதம்.
* திருவோண விரதம்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம், பல்லக்கில் வீணை மோகனி அலங்காரமாய் காட்சியளித்தல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற்சவ சேவை.
* இன்று சகல ஆலயங்களிலும் விநாயகப் பெருமானை வழிபடுதல் நன்று.
* மேல்நோக்கு நாள்.
23-ந் தேதி (சனி) :
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்- ரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.
24-ந் தேதி (ஞாயிறு) :
* ஸ்ரீவிநாயகர் சஷ்டி.
* சஷ்டி விரதம்.
* திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், சுசீந்திரம், செப்பரை ஆகிய கோவில்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவள்ளூர் வீரராகவர் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்.
* மேல்நோக்கு நாள்.
25-ந் தேதி (திங்கள்) :
* கிறிஸ்துமஸ் பண்டிகை.
* ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர், முதலமைச்சர் திருக் கோலத்துடன் இரவு பூத வாகனத்தில் பவனி.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை.
* குடந்தை சாரங்கபாணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவம்.
* சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X