search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (22.8.2017 முதல் 28.8.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (22.8.2017 முதல் 28.8.2017 வரை)

    22.8.2017 முதல் 28.8.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    22-ந்தேதி (செவ்வாய்) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.
    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் பவனி.
    * உப்பூர் விநாயகர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (புதன்) :

    * பலராமர் ஜெயந்தி.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி வரும் காட்சி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.
    * உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்.
    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வியாழன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் பவனி.
    * உப்பூர் விநாயகர் கோவிலில் ரத உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந்தேதி (வெள்ளி) :


    * விநாயகர் சதுர்த்தி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோவிலில் கருங்குருவிக்கு உபதேசமருளிய லீலை.
    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவில் ரத உற்சவம்.
    * பிள்ளையார்பட்டி, உப்பூர், மிலட்டூர், தேவகோட்டை ஆகிய தலங்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கு தீர்த்தவாரி.
    * சமநோக்கு நாள்.



    26-ந்தேதி (சனி) :

    * ரிஷி பஞ்சமி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் அளித்தல், பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் திருபவித்திர உற்சவம்.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சஷ்டி விரதம்.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல். கயிலாய, காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.
    * விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (திங்கள்) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளல், தங்கச் சப்பரத்திலும், யானை வாகனத்திலும் சுவாமி- அம்பாள் வீதி உலா.
    * விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×