search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகனுக்கு அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை விரதம்
    X

    முருகனுக்கு அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை விரதம்

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று இந்த விரத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்க்கலாம்.
    கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என கூறுவர்.  

    கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.

    ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக்கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,

    “நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
    தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”

    என்கிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.
    Next Story
    ×