search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடைகளை விலக்கும் ஆடி மாத விரதங்கள்
    X

    திருமண தடைகளை விலக்கும் ஆடி மாத விரதங்கள்

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும். எந்த விரதம் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    * ஆடி மாதம் முழுவதும் விரதமிருந்து மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    * ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    * ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    * ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

    * ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.

    * ஆடிப்பெருக்கு தினத்தன்று விரதமிருந்து காவிரி ஆற்றில் பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.,

    * ஆடி மாதம் நாக சதூர்த்தி விரதம் மேற் கொண்டால் குழந்தை பாக்கிய தடை நீங்கும்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
    Next Story
    ×