search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைச் செல்வம் தரும் விரத வழிபாடு
    X

    குழந்தைச் செல்வம் தரும் விரத வழிபாடு

    ஆடிமாதம் வரும் ஆடிப்பூரம் (வியாழக்கிழமை) அன்று அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறு கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். அப்பொழுது சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள்தான் ‘ஆடிப்பூரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. அன்று திருக்கோவில்கள் தோறும் உற்சவம் நடைபெறும். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர் கோவில்கள் பலவற்றையும் தேர்ந்தெடுத்துப் பரிகாரம் செய்து வருவர். இந்த ஆடிமாதம் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறு கண்டிப்பாக கிடைக்கும்.

    ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக, பச்சைப் பயறைத் தண்ணீரில் நனைய வைப்பார்கள். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைகட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு, அதை நம்பிக்கையோடு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு கிடைக்கும். ஆடிப்பூரத்தன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
    Next Story
    ×