என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆண் வாரிசு கிடைக்க அம்பிகை விரதம்
Byமாலை மலர்20 May 2017 10:10 AM GMT (Updated: 20 May 2017 10:10 AM GMT)
ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும். ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
நவக்கிரகங்களின் சேர்க்கை தான் கரு உருவாக காரணமாக அமைகிறது. சுக்ரன், சுக்கில சுரோனிதங்களை இணைக்கிறார். இணைந்த சுக்கில சுரோனிதங்களை கருவாக மாற்றுகிறது செவ்வாய், உடல் உறுப்புகள் உருவாக குரு துணைபுரிகிறார். பூந்தசை தோல் போன்றவற்றை சந்திரன் உருவாக்குகிறார்.
நகம், முடி, கழிவுப்பகுதி உற்பத்திக்கு சனியும், அறிவுக்கு புதனும் காரணமாகிறார். நமது முன்னோர்கள் கிரகங்களின் தன்மையை அறிந்தே புதுமணத் தம்பதியரை முதல் இரவில் கூட வைத்தனர். அதன் பிறகும் வரும் நாட்களில் சுப நாட்களை கணித்தே தம்பதியர் கூடினர்.
அதனால் தான் ஒழுக்கமான, நோய் நொடிகள் இல்லாத, தோஷம் இல்லாத, உடல் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இந்த கலிகாலத்தில் இந்த ஜோதிட முறைகளை பின்பற்றுவது குறைந்துள்ளதால், குழந்தை உருவாகுவதிலும், பிறந்த குழந்தையை பராமரிப்பதிலும் மருத்துவரை நாட வேண்டிய நிலையில் இன்றைய சமுதாயம் உள்ளது.
ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும். எனவே, ஆண் குழந்தைக்காக தவமிருப்பர். அவர்கள் ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரமன்று திருக்கோவில்கள் அனைத்திலும் உற்சவங்கள் நடைபெறும்.
ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். அது நன்கு முளைவிட்டிருக்கும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் விரதமிருந்து இதை நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாரிசு கிடைக்க வாய்ப்பு உருவாகும். தொட்டிலில் பிள்ளை தவழ துணையிருப்பாள் அம்பிகை.
நகம், முடி, கழிவுப்பகுதி உற்பத்திக்கு சனியும், அறிவுக்கு புதனும் காரணமாகிறார். நமது முன்னோர்கள் கிரகங்களின் தன்மையை அறிந்தே புதுமணத் தம்பதியரை முதல் இரவில் கூட வைத்தனர். அதன் பிறகும் வரும் நாட்களில் சுப நாட்களை கணித்தே தம்பதியர் கூடினர்.
அதனால் தான் ஒழுக்கமான, நோய் நொடிகள் இல்லாத, தோஷம் இல்லாத, உடல் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இந்த கலிகாலத்தில் இந்த ஜோதிட முறைகளை பின்பற்றுவது குறைந்துள்ளதால், குழந்தை உருவாகுவதிலும், பிறந்த குழந்தையை பராமரிப்பதிலும் மருத்துவரை நாட வேண்டிய நிலையில் இன்றைய சமுதாயம் உள்ளது.
ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும். எனவே, ஆண் குழந்தைக்காக தவமிருப்பர். அவர்கள் ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரமன்று திருக்கோவில்கள் அனைத்திலும் உற்சவங்கள் நடைபெறும்.
ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். அது நன்கு முளைவிட்டிருக்கும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் விரதமிருந்து இதை நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாரிசு கிடைக்க வாய்ப்பு உருவாகும். தொட்டிலில் பிள்ளை தவழ துணையிருப்பாள் அம்பிகை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X