search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வச்செழிப்பு தரும் சொர்ணாகர்ஷண பைரவர் விரதம்
    X

    செல்வச்செழிப்பு தரும் சொர்ணாகர்ஷண பைரவர் விரதம்

    பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.
    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வறுமை அகலவும், செல்வம் சேரவும் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்புரிகிறார். இவர் அமர்ந்த நிலையில் தன்மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு, ஒரு கையில் அமுத கலசமும், இன்னொரு கையில் சூலமும் ஏந்தியிருப்பார்.

    தலையில் வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருவார். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

    இந்த பைரவரை, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி அல்லது பவுர்ணமி நாளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும், பொன், பொருளும் கிடைக்கும். அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி விரதமிருந்து வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    பைரவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.
    Next Story
    ×