search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் முறை
    X

    இன்று பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் முறை

    இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    இன்று பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

    மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை 4.30 மணி முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி நந்திக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன் - பார்வதி எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி.

    பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக.

    எல்லாம் வல்ல இறைவனே போற்றும் இரண்டாவது சிவனாகிய நந்தி எம்பெருமானை மண்ணுலகில் அவர் அவதரித்த தலம் திருவையாற்றில் பிரதோஷ வேளையில் வணங்கி அவரின் அருளைப் பெறுவது வாழ்க்கையில் மிகவும் சிறப்புடையது.
    Next Story
    ×