என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஏழ்மையை விரட்டும் பிரதோஷ விரதம்
Byமாலை மலர்26 Dec 2016 6:22 AM GMT (Updated: 26 Dec 2016 6:22 AM GMT)
ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். பிரதோஷத்தன்று சிவபெருமானை ஆராதிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பட்சத்திலும் துவாதசிக்கு மேல் திரயோதசி சேரும் நாள் பிரதோஷம் எனப்படும். அது பூத, பிரேத, பிசாச, ராட்சாதிகள் உலகத்தோரைப் பிடிக்கும் சமயமாகும். அப்பொழுது எந்த வேலையிலும் ஈடுபடாமல் மவுன விரதம் இருந்து, சிவபெருமானை ஆராதிக்க வேண்டும்.
மேற்படி பிரதோஷம் சனிக்கிழமையுடன் சேர்ந்தால் மகா பிரதோஷம் எனப்படும். அப்பொழுது உலகுக்குத் தீமை நேரிடாமல் இறைவன் தாண்டவம் ஆடுகிறார். எல்லோரும் அங்கே கவனத்தைச் செலுத்துவதால் ஒருவருக்கும் தீமை நேரிடாது.
செல்வம், மக்கட்பேறு, ஆரோக்கியம், துஷ்டக்கிரகம் விலகல், துக்க நிவர்த்தி இவற்றை நாடுவோர் பிரதோஷ விரதம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில், சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, பூஜிப்போர் சகல பாக்கியத்தையும் பெறுவார்கள்.
சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.
மேற்படி பிரதோஷம் சனிக்கிழமையுடன் சேர்ந்தால் மகா பிரதோஷம் எனப்படும். அப்பொழுது உலகுக்குத் தீமை நேரிடாமல் இறைவன் தாண்டவம் ஆடுகிறார். எல்லோரும் அங்கே கவனத்தைச் செலுத்துவதால் ஒருவருக்கும் தீமை நேரிடாது.
செல்வம், மக்கட்பேறு, ஆரோக்கியம், துஷ்டக்கிரகம் விலகல், துக்க நிவர்த்தி இவற்றை நாடுவோர் பிரதோஷ விரதம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில், சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, பூஜிப்போர் சகல பாக்கியத்தையும் பெறுவார்கள்.
சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X