search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனந்த விரதம் கடைபிடிக்கும் முறை
    X

    அனந்த விரதம் கடைபிடிக்கும் முறை

    அனந்த விரதம் கடைபிடிக்கும் முறையும், இந்த விரதம் அனுஷ்ப்பதால் கிடைக்கும் பலன்களையும் கீழே பார்க்கலாம்.
    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் பதினான்கை, ஏழைகளுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத அளவுக்கு செல்வங்கள் வந்து சேரும்.
    Next Story
    ×