search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
    X

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா வருகின்ற அக் 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 12-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    இத்திருவிழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்திருவிழாவையொட்டி பக்தர்கள் முன்னதாக விரதம் இருப்பார்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலுக்கு வந்து வலது கையில் காப்பு கட்டி பின்பு தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவில் சேர்ப்பதே இதன் சிறப்பாகும். 

    இதனையொட்டி 21 நாள் விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கோவிலில் நீண்ட கீயூவில் நின்று பூசாரி கையினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தினசரி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். தசரா திருவிழா இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது.
    Next Story
    ×