search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேனின் மகத்துவம் குறித்து திருமறை
    X

    தேனின் மகத்துவம் குறித்து திருமறை

    ஒவ்வொரு பொருளின் மேன்மையைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தவும் விவரிக்கவும் இறை வசனங்களை மட்டுமல்ல, அதனைப் பின்பற்றும் இறைத்தூதரையும் இறைவன் நமக்கு அருளினான்.
    [06:37, 1/8/2018] Asif Meeran: இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம், அவர்களின் அறையில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் அதிக நேரம் தங்கிவிடுவார்கள். இதைப் பிடிக்காத நபியவர்களுடைய மற்ற துணைவியரான ஆயிஷா(ரலி) அவர்களும், ஹஃப்ஸா(ரலி) அவர்களும் நபிகளாரின் மற்ற மனைவிகளுடன் கூடிப் பேசி ஒரு முடிவு செய்துகொண்டனர். 

    தேன் சாப்பிட்ட பின், நபி(ஸல்) அவர்கள் முதலில் யாருடைய வீட்டிற்கு வந்தாலும் சரி, அவர் மீது துர்வாடை வருகிறது என்று கூற வேண்டுமென்று பேசிக் கொண்டனர்.

    வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்தபோது அவர்கள் பேசி வைத்திருந்தபடி, “நீங்கள் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இல்லை நான் பிசின் சாப்பிடவில்லை. 

    ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் அவரின் அறையில் தேன் குடித்து விட்டுத்தானே வந்தேன்” என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), “இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு, தேனை உறிஞ்சிக் கொண்டு வந்திருக்கலாம். எனவேதான் வாடை வருகிறது” என்று உறுதி செய்யும் விதமாகப் பேசினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் “இனிமேல், சத்தியமாக நான் அதை ஒருபோதும் குடிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். 

    இது குறித்தொரு இறை வசனம் அருளப்பெற்றது, “நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்கக் கிருபையுடையவன்” என்று தொடங்கி “நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அது உங்களுக்கே நன்று” என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

    நபி(ஸல்) அவர்களுக்கு உண்மை தெரிந்தது. இது பற்றி நபி(ஸல்) தம் மனைவிகளிடம் வினவ, “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அவர்கள் நபிகளாரிடம் கேட்டபோது “யாவற்றையும் நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் ஆகிய அல்லாஹ் எனக்குத் தெரிவித்தான்” என்று பதில் கூறினார்கள் நபி(ஸல்). இதற்காக ஆயிஷா மற்றும் ஹப்ஸாவை அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரும்படியும் சொன்னார்கள்.

    தேனின் மேன்மையைக் குறித்து மற்றொரு இறை வசனத்தில் “நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் அதாவது தேன் வெளியாகிறது; அதில் மனிதர்களுக்குப் பிணி தீர்க்க வல்ல சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” என்றும் அருளப்பெற்றது.

    ஒவ்வொரு பொருளின் மேன்மையைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தவும் விவரிக்கவும் இறை வசனங்களை மட்டுமல்ல, அதனைப் பின்பற்றும் இறைத்தூதரையும் இறைவன் நமக்கு அருளினான்.

    ஸஹீஹ் புகாரி: 5:65:4912, 6:68:5267, திருக்குர்ஆன் 66:1, 16:69

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×